Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

சிபிஎஸ்இ அங்கீகாரத்துக்கு விண்ணப்பம் ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு :

கரோனா பரவலால் சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான காலஅவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.​

சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் ஆண்டுதோறும் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் நடப்புஆண்டு கரோனா பரவலால் பள்ளிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க ஏப்.30-ம் தேதி வரை சிபிஎஸ்இ காலஅவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் பல பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்க இயலவில்லை. இதையடுத்து விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x