Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் கேரளம் முதல் தெற்கு கொங்கன்வரை 0.9 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யக் கூடும். ஏப்.15-ம் தேதி தமிழகம்,புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானமழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்இடி, காற்றுடன் கனமழையும் பெய்யும்.
இதேபோல், ஏப்.16, 17-ம் தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானமழையும், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT