Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா மார்ச் 11-ல் நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
அண்ணா பல்கலையின் 41-வது பட்டமளிப்பு விழா மார்ச் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
பல்கலை. அளவில் முதலிடம்பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் விழாவில் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்கவுள்ளார். மீதமுள்ள மாணவர்களுக்கு தங்கள் கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT