Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

சிவில் நீதிபதி பதவி: மெயின் தேர்வு முடிவு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி நடத்திய சிவில் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்.8, 9-ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியின்கீழ் வரும் சிவில் நீதிபதிபதவியில் 171 காலியிடங்களை நிரப்ப கடந்த 2019 நவ. 24-ல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 7,942 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 239 பேர் மெயின்தேர்வுக்கு தகுதி பெற்றனர். மெயின் தேர்வு கடந்த அக். 17-ம் தேதி நடந்தது.

அதில் 58 பேர் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல்தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு பிப்.8, 9-ம் தேதி களில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x