Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படம் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல்

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை இந்தியாவுக்கு வெளியே ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதால் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் வெளியீடாக விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் எவ்விதப் பிரச்சினையும் இன்றி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்துமுடிவெடுத்தன. அதேபோல, ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் ஜன.14-ம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இந்தியாவுக்குவெளியே ஓடிடி தளத்திலும் வெளியிட உள்ளதாக ‘ஈஸ்வரன்’ படக்குழுவினர் நேற்று திடீரென அறிவித்தனர். இதற்கு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக திரையரங்குஉரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தபன்னீர்செல்வம் கூறும்போது,‘‘இது மிகவும் சிக்கலான நேரம்.‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் அதேநாளில்ஓடிடி வழியாக இந்தியாவுக்கு வெளியே ரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வந்துள்ளது. இது திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதார பிரச்சினை. வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆனாலும் அது இந்தியாவில் பிரதிபலிக்கும். அதனால் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட விருப்பமில்லை. இப்படிஒரு படம் ரிலீஸ் ஆனால் இதேபாணியில் அடுத்தடுத்து படங்கள்வெளியாகும். அதனால் நாம் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது’’ என்றார்.

ஆகவே, திட்டமிட்டபடி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு குழுவான மாதவ் மீடியாநிறுவனம் நேற்று தனது ட்விட்டர்பக்கத்தில், ‘‘திரையரங்குகள் உரிமையாளர்களின் கோரிக்கையைஏற்று வெளிநாட்டில் ’ஈஸ்வரன்’படத்தை ஓடிடியில் வெளியிடுவதை நிறுத்துகிறோம். எங்களுக்குதமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட அனுமதியை பெற்றுத் தர ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x