Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

தமிழகத்தில் புதிதாக 1,688 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 1,688 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று 1,031 ஆண்கள், 657 பெண்கள் என மொத்தம் 1,688 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 489, கோவையில் 147, செங்கல்பட்டில் 125 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து66 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 660 பேர் உட்படதமிழகம் முழுவதும் 7 லட்சத்து 41 ஆயிரத்து 705 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 418 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,173 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 4,622 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 13,404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 11 பேர் என நேற்று 18 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 8 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,568 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,802 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 84, கோவையில் 47,219, செங்கல்பட்டில் 46,564,திருவள்ளூரில் 40,163 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் 214 அரசு மற்றும்தனியார் ஆய்வகங்களில் இதுவரை1 கோடியே 14 லட்சத்து 1,239 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.நேற்று மட்டும் 68,033 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட27,014 குழந்தைகள், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 42 ஆயிரத்து 241 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 97,422 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 500-க்கும் கீழ் குறைந்தது

சென்னையில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்து வருகிறது.

சென்னையில் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 601 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் தினமும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில், தற்போது தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "அரசு வழிகாட்டுதல்படி மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக் கைகளால் தற்போது தொற்று குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் தொற்று 500-ஐ கடந்தபோது, தினமும் 6 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது தினமும் 9 ஆயிரத்துக்கு மேல் பரிசோதனை செய்து வருகிறோம். விரைவில் கரோனா இல்லாத மாநகரமாக சென்னை மாறும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x