Published : 13 Dec 2021 03:06 AM
Last Updated : 13 Dec 2021 03:06 AM

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக - விமான நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி இழப்பு :

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 24-ல் மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது.

அதற்கு மறுநாள் முதல் உள்நாட்டு விமானங்கள் சேவை முடக்கப்பட்டது. அதன் பிறகு மே மாதத்தில் 33% இருக்கைகளுடன் விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. அந்தக் கட்டுப்பாடு அக்டோபர் மாதம் வரையில் நீடித்தது.

இந்நிலையில், விமான போக்கு வரத்துத் துறையின் நிதி நிலைமை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், ‘‘கரோனா காலத்தில் இந்திய விமானத்துறை மிகுந்த பாதிப்பைச் சந்தித்தது. இதனால் 2020-21 நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடியும் விமான நிலையங்களுக்கு ரூ.5,116 கோடியும் இழப்பு ஏற்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையம் விமான நிலையங்களின் மேம்பாட்டுக்கும் விரிவாக்கத்துக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.25,000 கோடியை செலவிட உள்ளது’’ என தெரிவித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x