Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

அந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா 4-ம் இடம் :

புதுடெல்லி

அந்நிய செலாவணி தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று மக்களவையில் கூறியதாவது.

கடந்த நவம்பர் 19-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 640.4 பில்லியன் டாலராக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-ம்இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான்சுவிட்சர்லாந்து ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.

2014-15 முதல் 2020-21 வரையிலான ஏழு ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் ரூ.16.7 லட்சம் கோடி கலால் வரி பெறப்பட்டுள்ளது. 2013-14-ல் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.2, டீசலுக்கு ரூ.3.46 ஆக இருந்தது. தற்போது இது முறையே ரூ.27.9,ரூ.21.80 ஆக உள்ளது என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x