Published : 23 Nov 2021 03:05 AM
Last Updated : 23 Nov 2021 03:05 AM

ரூ.24 கோடி மோசடி செய்த - ஆந்திர தொண்டு அமைப்பு மீதானவழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவு :

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு ஏஆர்டிஏஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு செயல்படுகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை நெதர்லாந்தை சேர்ந்த தொண்டு அமைப்பிடம் இருந்து ஏஆர்டிஏஆர் ரூ.24 கோடி நிதியுதவி பெற்றது. இதன் மூலம் 300 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக ஆந்திர தொண்டு நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து விசாரித்தபோது மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நெதர்லாந்து தொண்டு அமைப்பு சார்பில் ஆந்திர போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே ரூ.24 கோடியை திருப்பி வழங்க ஏஆர்டிஏஆர் ஒப்புக் கொண்டது. ஆனால் முழு தொகையை வழங்கவில்லை.

இந்த சூழலில் தங்கள் மீதான குற்றவியல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஏஆர்டிஏஆர் அமைப்பின் தலைவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்று 3 பேர் மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்து தொண்டு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர். ஏஆர்டிஏஆர் தொண்டு அமைப்பின் தலைவர், அவரது மனைவி, மகன் மீதான வழக்கை விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x