Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

3-வது சுற்றில் போபண்ணா ஜோடி :

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் பிராங்கோ ஸ்குகோர் ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ரோகன் போபண்ணா ஜோடி தங்களது 2-வது சுற்றில் அமெரிக்காவின் நிக்கோலஸ் மன்ரோ, பிரான்சிஸ் தியாஃபோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினாஸ்விட்டோலினா 6-0, 6-4 என்றநேர் செட்டில் 75-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அன் லியை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார். அதேவேளையில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்தி காயம் காரணமாக பாதிலேயே விலகினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x