

ஆன்லைன் செய்தி மற்றும் ஓடிடி தளங்களுக்கு 15 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஊடகங்களின் செயல்பாடுகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக சமூக ஊடக நிறுவனங்கள் ஓடிடி தளங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊடக செய்தி நிறுவனங்கள், பிற நிறுவனங்களும் சுதந்திரமாக செயல்பட எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்பதை தெரிவிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்களை விசாரிக்க 3 அடுக்கு நிலைகளை உருவாக்க வேண்டும் என ஓடிடி தளங்களுக்கு தெரிவித்துள்ளது.