Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

ஆன்டிகுவாவில் வசித்து வந்த மெகுல் சோக்சி மாயம் :

பஞ்சாப் நேஷனல் வங்கியில்ரூ.13,500 கோடியை மோசடி செய்த வழக்கில் மெகுல் சோக்சி இந்தியாவிலிருந்து தப்பினார்.

ஆன்டிகுவா மற்றும் பார்படா தீவில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை பெற்ற மெகுல் சோக்சி கடந்த 2018-ம் ஆண்டு முதல் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி காரில் பயணித்த மெகுல் சோக்சி அதன் பிறகு காணவில்லை என்று ராயல் போலீஸ் ஃபோர்ஸ் ஆஃப் கரீபியன் தெரிவித்துள்ளது.

ஆன்டிகுவா போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 23-ம்தேதி மெகுல் சோக்சி காரில் செல்வதைக் கண்டோம். அவருடைய காரைக் கைப்பற்றி உள்ளோம். அவருடைய புகைப்படத்தை தீவின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x