Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

கரோனாவால் : பெற்றோரை இழந்த : 577 குழந்தைகள் :

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்தது. எனினும், கடந்த 2 வாரங்களாக பாதிப்புகுறைந்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் கணவன், மனைவி ஆகியஇருவரும் உயிரிழந்ததால் பல குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்து துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனதுட்விட்டர் பக்கத்தில், “கரோனா காரணமாக தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே 26 வரையில் கரோனா காரணமாக 577 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாநில அரசுகளின் புள்ளி விவரம் கூறுகிறது” என பதிவிட்டுள்ளார்.

அதேநேரம், பெற்றோரை இழந்த குழந்தைகளை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் பராமரித்து வருவதாகவும் அந்த குழந்தைகளை மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கான மறுவாழ்வை உறுதி செய்வதற்காக, அவர்களை குழந்தைகள் நலக் குழு தொடந்து கண்காணித்து வருகிறது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x