Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

ஏப்ரல் காலாண்டில் ரூ.5.4 லட்சம் கோடி நஷ்டம்: ஆய்வு தகவல் :

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-வது அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.5.4 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2.4 சதவீத அளவுக்கு பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் அதன்படி கணக்கிடும் போது நஷ்டம் 7,400 கோடி டாலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவின் ஜிடிபி 2021-22 நிதி ஆண்டில் 80 புள்ளிகள் குறைந்து 9.2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x