Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM
டெல்லி ஷத்ரஸால் அரங்கில் கடந்த 4-ம் தேதி, ஒலிம்பியன் சுஷில் குமார் தரப்பினருக்கும், இளம் மல்யுத்த வீரர் சாகர் தன்கட் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சாகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு வந்த சுஷில் குமாரும் அவரது நண்பர் அஜஸ் குமார் என்பவரும் கடந்த 5-ம் தேதியில் இருந்து தலைமறைவாயினர். இவர்களை கைது செய்ய டெல்லி காவல் துறையினர் சிறப்புப் படை அமைத்தனர்.
மேலும் சுஷில் குமார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லூக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன் ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுஷில் குமார் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சமும், அஜய் குமார் குறித்து தகவல் அளித்தால். ரூ.50 ஆயிரமும் சன்மானம் அளிக்கப்படும் என காவல் துறையினர் அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை டெல்லியின் முந்த்கா பகுதியில் இரு சக்கர வாகனம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற சுஷில் குமாரை மடக்கிப் பிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். அவருடன் அஜய் குமாரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT