Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

மேலும் 25 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் இந்தியா வருகிறது :

கரோனா தொற்றால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. சமீபத்திய புள்ளிவிவரப்படி கடந்த சில வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 57.69 லட்சம் மருத்துவஉபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 23.62 லட்சம் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் விரைவில் இந்தியா வர உள்ளன.

இந்த வரிசையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மேலும் 25 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவருகிறது. இதில் பெரும்பாலானாவை பிரான்ஸில் இருந்து சி-17 குளோப் மாஸ்டர்சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஜெனரேட்டரும் ஒரு மணி நேரத்தில் 24,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x