Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM
மேற்கு வங்கத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் நேற்று கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் மே 16-ம் தேதி காலை 6 மணிமுதல் 30-ம் தேதி மாலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும். டாக்சிமற்றும் ஆட்டோரிக்சா உட்படஅனைத்து பொது போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை. அதேநேரம், சுகாதாரம், பால், ஊடகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
காய்கறி, மளிகை கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். மற்ற கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மத, அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT