Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அவசியம் : டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து

டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, இது தொடர்பாக மருத்துவமனைகள் சார்பில்டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே, பத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 8 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இதுபோல மேலும் சில மருத்துவமனைகளில் இதே காரணத்தால் சில நோயாளிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் விபின் சங்கி மற்றும்ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, “டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்மிகவும் அவசியமானவை.

லாப நோக்கத்தை கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்காமல் மூலதன செலவை குறைத்துக் கொண்டது கண்டிக்கத்தக்கது. அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டு ஆலைகளை அமைத்திருக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் டெல்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x