Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

சீனாவில் கரோனா பற்றி செய்தி வெளியிட்ட பெண் பத்திரிகையாளருக்கு5 ஆண்டுகள் சிறை தண்டனை

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொடர்பான செய்தியை வெளியிட்டதாக சிட்டிசன் பத்திரிகையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரும், முன்னாள் வழக்கறிஞருமான ஜாங் ஜான் என்பவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். தவறான செய்திகளை பரப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகளை எஸ்எம்எஸ், வீடியோ, வீசாட், ட்விட்டர், யூடியூப் மூலமாக பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் பத்திரிகையாளர் ஜாங் ஜான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. அடிக்கடி சண்டை போடுதல், பிரச்சினையை ஏற்படுத்துதல் போன்ற சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் உள்ள ஊடகங்களுக்கு வூஹானில் பரவிய கரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்திகளை பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜான் பேட்டியாகக் கொடுத்தார் என்றும் அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சீனாவில் அரசு விதிக்கு மாறாக கரோனா குறித்துச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் மாயமானதாக சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x