Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM

99.7% மக்களுக்கு ஆதார் அட்டை : யுஐடிஏஐ தகவல் :

புதுடெல்லி

இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) தலைமை செயல் அதிகாரி சவுரவ் கர்க் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களிலும் மாநில அரசுகளின் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆதார் தரவுகள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 131 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது 99.7% மக்களுக்கு ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் அட்டை திட்டத்தால் நேரடி மானியதிட்டங்களில் ரூ.2.25 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x