Published : 07 Dec 2021 03:08 AM
Last Updated : 07 Dec 2021 03:08 AM

சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது :

நாகர்கோவில்

வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்து வரும் சரக்குரயில்களை நிறுத்த, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தனி நடைமேடை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இங்கிருந்து சரக்கு ரயில் இன்ஜின் ஒன்று புறப்பட்டுச் சென்றது. சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரயில் இன்ஜினின் 3 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி, இன்ஜின் தடம் புரண்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு ரயில் வர வழைக்கப்பட்டு, இன்ஜின் மீட்கப்பட்டது. சேதமடைந்த தண்டவாளமும் சீரமைக் கப்பட்டது. இவ்விபத்தால் வழக்கமான ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x