Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM
டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அவர்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த மோதலில் காயமடைந்த 5 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்.பி சுகுணாசிங், கோட்டாட்சியர் பாலாஜி மற்றும் மயிலாடுதுறை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT