Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM

கத்தி முனையில் பெண்களிடம் நகை பறிப்பு :

வேலூர்: காட்பாடி கல்புதூர் ராஜலிங்கம் நகரைச் சேர்ந்தவர்கள் சாந்தா (49), கோமதி (43). இவர்கள், இருவரும் அதே பகுதியில் நடந்து சென்றபோது மர்ம நபர்கள் இருவர் கத்தி முனையில் தாக்கி அவர்கள் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இது தொடர்பான புகாரின்பேரில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். நகை பறிப்பு தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x