Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

24 மணி நேரத்தில் 9,216 பேருக்கு கரோனா தொற்று :

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 99,976 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்தனர்.

இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 70,115 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 45,666 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x