Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

சிங்கம்புணரி அருகே 5 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு :

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை ஊராட்சி ஓடப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாண்டி, பிச்சப்பன், செல்வம், முருகானந்தம், கலைச்செல்வி. இவர்களது வீடுகள் மீது நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியது. இதில் 2 வீடுகளில் லேசாக தீப்பற்றியது. இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் தீயை அணைத்தனர்.

திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் ஆண்டனி செல்லத்துரை தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x