Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

மும்பையில் வெளிநாட்டினர்4 பேருக்கு கரோனா :

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதியவகை கரோனா வைரஸ் உலகம்முழுவதும் பரவி வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கடந்த சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த மேலும் 4 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்த வகையான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைகண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x