Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் : வரும் 10-ம் தேதி குறைதீர் கூட்டம் :

கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் இணையவழியில் வரும் 10-ம் தேதி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 மணி முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள், பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் என்ற அடிப்படையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது குறைகளை அதுகுறித்த விவரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி (கட்டாயம்) ஆகிய விவரங்களுடன் வரும் 8-ம் தேதிக்குள், அலுவலகத்தின் pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x