Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

திருமூர்த்தி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் - பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது :

திருமூர்த்தி அணையிலிருந்து பாலாற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீரால் ஆனைமலை அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சண்முகபுரத்தில் பாலாற்றங்கரையில் பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சிசுற்று வட்டாரம் மற்றும் அர்த்த நாரிப்பாளையம் வனப்பகுதியில் பெய்த கனமழையால் மாடேத்தி பள்ளம், ஆலாங்கண்டி பள்ளங் களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாலாற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை நிரம்பியதால், அணையிலிருந்து நேற்று முன்தினம் விநாடிக்கு 150 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. மழைவெள்ளத்துடன் உபரி நீரும் சேர்ந்ததால் சண்முகபுரம் பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பாலாற்றின் நடுவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை தண்ணீர் சூழ்ந்தது. கோயிலுக்கான தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.பாதுகாப்பு கருதி கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை.

இதையடுத்து, பக்தர்கள் ஆற்றின் கரையில் சூடம் ஏற்றி வழிபட்டுசென்றனர். ஆற்றில் வெள்ளம் குறைந்த பிறகு, நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x