Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM

காஷ்மீரில் என்கவுன்ட்டர்2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை :

காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ராஜ் போரா பகுதியில் தீவிரவாதி கள் பதுங்கியிருப்பதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீஸார் நேற்று சோதனை நடத்தி தீவிர வாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்தனர். அப்போது, பாதுகாப்புப் படை யினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி யால் சுட்டனர். கையெறி குண்டு களையும் வீசினர். பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் உள்ளூர் கமாண்டர் யாசிர் பர்ரே மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதி பர்கான் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தகவலை காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘‘என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட யாசிர் பர்ரே வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணர். யாசிர் பர்ரே, பர்கான் மீது காஷ்மீரில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீவிரவாத வழக்குகளில் தொடர் புடையவர்கள். இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டது பாதுகாப்பு படை யினருக்கு மிகப்பெரிய வெற்றி’’ என்று தெரிவித்தார். ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x