Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM
கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என்பதால், நல்ல நீர் தேங்கும் வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், பூச்செடிகள், பெயிண்ட் டப்பாக்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 42-வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் தனியார் அலுவலக தண்ணீர் சேமிப்பு கலனில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன. டெங்கு காய்ச்சல் பரப்ப காரணமாக இருந்ததால் தொடர்புடைய தனியார் அலுவலகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT