Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் - முதுநிலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.

இதனால் 100 சதவீதம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய மருத்துவமனையில் தற்போது 65 சதவீதம் மருத்துவர்கள் மட்டுமேபணியில் ஈடுபடும் சூழ்நிலை உள்ளது. இதனால், தங்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளதாகவும் இதைக் கருத்தில் கொண்டுஉடனடியாக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கை நடத்தவேண்டும் என்றும் கோரி வகுப்பைபுறக்கணித்து அமைதியான முறையில் கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நீட் தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அரசு உடனடியாக கவுன்சலிங் நடத்தி மாணவர்களை தேர்வு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டுமென கோரி கண்டன முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x