Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

நாடு முழுவதும் 288 முகாம்கள் மூலம் - சத்ய சாய் சேவா நிறுவனம் 10,418 யூனிட் ரத்தம் சேகரிப்பு :

சத்ய சாய் சேவா நிறுவனங்களின் இளைஞர் அணி மன்றம் நாடு முழுவதும் நடத்திய 288 ரத்த தான முகாம்களில் 10,418 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை தாக்கத்தால், இந்தியாவில் ரத்த தான முகாம்கள் நடத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், ரத்தத்தின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. போதிய அளவு ரத்தம் இருப்பு இல்லாததால் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவது தாமதம் ஆகின்றன.

இந்நிலையில், சத்ய சாய்பாபாவின் 96-வது ஜெயந்தி விழாகடந்த 23-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் இளைஞர் மன்றம் சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு கடந்த நவ.21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 26 மாநிலங்களில் 288 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 10,418 யூனிட் ரத்தம்சேகரிக்கப்பட்டுள்ளது. தானமாகபெறப்பட்ட ரத்தம், அரசுமருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x