Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

வில்லிபுத்தூரில் - கூலித் தொழிலாளி கொலை :

வில்லிபுத்தூர் குலாலர் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (65). கூலித் தொழிலாளி. இவருக்கும் இவரது தம்பி சின்னச்சாமி குடும்பத்தினருக்கும் பொதுப் பாதை சம்பந்தமாக பிரச்சினை இருந்தது. கடந்த 25-ம் தேதி கருப்பையாவின் மகன்கள் ரெங்கமன்னார், பண்டரிநாதன், கோபால கிருஷ்ணன் ஆகியோருக்கும் சின்னச்சாமி மகன்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கருப்பை யாவின் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு ரெங்கமன்னாரும், கோபாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தன்று கருப்பையா வின் மனைவி ரங்கம் அவரது தங்கை வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கருப் பையா நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுக் கிடந் தார். இதுகுறித்து அவரது மனைவி ரங்கம் அளித்த புகாரின்பேரில் சின்னச்சாமி, ராதாகிருஷ்ணன், பெருமாள் சாமி ஆகியோர் மீது வில்லிபுத்தூர் நகர் போலீ ஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x