Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM
வில்லிபுத்தூர் குலாலர் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (65). கூலித் தொழிலாளி. இவருக்கும் இவரது தம்பி சின்னச்சாமி குடும்பத்தினருக்கும் பொதுப் பாதை சம்பந்தமாக பிரச்சினை இருந்தது. கடந்த 25-ம் தேதி கருப்பையாவின் மகன்கள் ரெங்கமன்னார், பண்டரிநாதன், கோபால கிருஷ்ணன் ஆகியோருக்கும் சின்னச்சாமி மகன்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக கருப்பை யாவின் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு ரெங்கமன்னாரும், கோபாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தன்று கருப்பையா வின் மனைவி ரங்கம் அவரது தங்கை வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கருப் பையா நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுக் கிடந் தார். இதுகுறித்து அவரது மனைவி ரங்கம் அளித்த புகாரின்பேரில் சின்னச்சாமி, ராதாகிருஷ்ணன், பெருமாள் சாமி ஆகியோர் மீது வில்லிபுத்தூர் நகர் போலீ ஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT