Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM

ஆந்திர ஆளுநருக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி

ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனுக்கு மீண்டும் உடல் நலம் குறைவு ஏற்பட்டு, நேற்று அவர் விமானம் மூலம் விஜயவாடாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, ஹைதரபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆந்திர ஆளுநரான பிஸ்வபூஷன் ஹரிசந்தனுக்கு இருமல், காய்ச்சல் வந்ததால், இம்மாதம் 15-ம் தேதி அவருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், விஜயவாடா தனியார் மருத்துவமனையிலிருந்து, தனி விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டர். அங்கு கடந்த 17-ம் தேதி கச்சிபவுலி பகுதியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, கடந்த 20 மற்றும் 22 ஆகிய இரு தேதிகளிலும் கரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ‘நெகடிவ்’ வந்ததால், அவர் விஜயவாடா திரும்பினார்.

இந்நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் இருமல், காய்ச்சல் என வந்ததால், தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பட விளக்கம்

ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x