Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM
கூடலூர்: கேரள மாநிலம் கொச்சி எர்ணாகுளம் பாளையம் தாலுகாவை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் வினோத் (45). இவர், தன் நண்பர்களுடன் நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று மாலை மாயாற்றில் குளிப்பதற்காக அனைவரும் சென்றுள்ளனர். ஆற்றில் இறங்கி குளித்தபோது வினோத், சுழலில் சிக்கியுள்ளார். அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில் அங்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றில் இருந்து வினோத்தின் சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT