Published : 30 Nov 2021 03:10 AM
Last Updated : 30 Nov 2021 03:10 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் : வெறிச்சோடிய மக்கள் குறைதீர்வு கூட்டம் :

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்: கனமழை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் வெறிச்சோடியே காணப்பட்டது.

பொதுமக்கள் தங்களது தேவைகளை மனுக்களாக எழுதி வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தின் வாயிலாக அரசின் கவனத் துக்கு கொண்டு செல்கின்றனர். அந்தவகையில், திங்கள்கிழமையான நேற்று 3 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, 3 மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் மனுக்களை அளிக்க பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குறைந்த அளவிலான மனுக்களை அதிகாரிகள் நேற்று பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x