Published : 29 Nov 2021 03:05 AM
Last Updated : 29 Nov 2021 03:05 AM

ஒரே நாளில் விசாரணை முடிந்து: பாலியல் வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

பிஹார்ஷரீப்

பிஹார் மாநிலம் அராரியா மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக நாளந்தா சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று நீதிபதி மன்வேந்திர மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது. சிறுவன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவனுக்கு நீதிபதி 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அன்றே தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளி சிறுவன் என்பதால் சிறார் சீ்ர்திருத்தப் பள்ளிக்கு சிறுவனை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ஒரே நாளில் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பளிக்கப்பட்டதன் மூலம் புதிய முன்மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2018-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்திம் டால்டியா நீதிமன்றம் பாலியல் குற்றவாளி மீதான வழக்கில் 3 நாட்களில் விசாரணையை முடித்து தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x