Published : 29 Nov 2021 03:09 AM
Last Updated : 29 Nov 2021 03:09 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - சிறப்பு முகாம் மூலம் 64 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நேற்று நடைபெற்ற 12-வது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்துவது தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி முகாமில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 695 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அணைக்கட்டு வட்டம் கந்தனேரி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 400 இடங்களில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 439 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நெமிலி வட்டம் வேட்டங்குளம் புது காலனி தெருவில் வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்துவதை ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 300 இடங்களில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 23 ஆயிரத்து 626 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x