Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்: நாடு முழுவதும் கொண்டுவர வி.எச்.பி வலியுறுத்தல் :

விசுவ இந்து பரிஷத் (வி.எச்.பி) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற வி.எச்.பி சர்வதேச செயல் தலைவர் அலோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்மைகாலமாக கட்டாய மதமாற்றம் நடைபெறுவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதிச்செயல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க நம்நாட்டில் 11 மாநிலங்கள் சட்டம் இயற்றிஉள்ளன. இந்த தடை சட்டம், நாடு முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும். இந்து கோயில்கள், திருமடங்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்கும் வகையில் நாடு தழுவிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக இந்து மதத் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x