Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியரை : காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி :

கோவை: கோவையில் பிளஸ் 2 மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த விவகாரத்தில், தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (31) மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (46) ஆகியோரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதில், மீரா ஜாக்சனுக்கு நேற்றுமுன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாநகர மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, மிதுன் சக்கரவர்த்தியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து, அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x