Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

சாலைகளை சீரமைக்கக் கோரி மறியல் :

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரியமாணிக்கம், சுப்ரீம் நகர், இந்திராநகர், ஏரிப்பாக்கம் மற்றும் மதகடிப்பட்டு - மடுகரை சாலைகளில் 20 ஆண்டுகளுக்கு முன்புதார்சாலை போடப்பட்டது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசம டைந்த அப்பகுதி மக்கள் நேற்று நெட்டப் பாக்கம் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x