Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு :

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூரைச் சேர்ந்த சித்திரவேல் மகன் சுரேஷ் (31). இவரது மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் ஹர்திக், மித்ரன்.

சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்த சுரேஷ், சிவகங்கை பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், பணி நிமித்தமாக சிவகங்கைக்கு சென்ற சுரேஷ், மோட்டார் சைக்கிளில் நேற்று சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

இளையான்குடி அருகே திருவேங்கடம் பகுதியில் வந்தபோது பரமக்குடியில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளையான்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x