Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம் :

நாமக்கல்: மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-2022-ம் ஆண்டிற்கான கரும்பு அரவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். எம்பி-க்கள் ஏ.கே.பி.சின்ராஜ், ராஜேஷ்குமார், எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கரும்பு அரவையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டு அரவை பருவத்தில் 1.14 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இந்தாண்டு அரவைப் பருவத்திற்கு 1.60 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டில் 3 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா.மல்லிகா, கூட்டுறவு சங்கத் தலைவர் கே. பி.எஸ்.சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்தாண்டுக்கான கரும்பு அரவையை சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x