Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM
சேலம்
சேலம் அடுத்த மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்தில், இன்று (26-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், முட்டை கடை ஒரு பகுதி, ஏரிபுதூர், ஏ.என்.மங்கலம், எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, பூசாரிப்பட்டி, அனுப்பூர், கோலாத்துக்கோம்பை, நீர்முள்ளிகுட்டை, பள்ளக்காடு, காட்டூர், குள்ளம்பட்டி, வெள்ளியம்பட்டி, வலசையூர் ஒரு பகுதி, பருத்திக்காடு, தாதனூர், பூவனூர், குப்பனூர், மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, செங்காட்டூர், கத்திரிப்பட்டி, அரமனுர், அடிமலைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் கிழக்குக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
புதன்சந்தை
நாமக்கல் அருகே புதன்சந்தை துணை மின் நிலையத்தில் இன்று (26-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளுர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது, என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT