Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் விநாடிக்கு 1,548 கனஅடி நீர் திறப்பு :

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அதிகனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போதைய அணையின் நீர் மட்டம் 40.02 அடி. அணைக்கு விநாடிக்கு 1,548 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு தண்டோரா மூலமாக எச்சரிக்கை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x