Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

வீடு, வீடாக கரோனா தடுப்பூசி :

நாகர்கோவில்: தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 11-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை பகுதிகளிலும், சுற்றுப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 17 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை கண்டுபிடித்து தடுப்பூசி போடும் வகையில் மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் வீடு வீடாகச்சென்று கரோனா தடுப்பூசி செலுத்தினர். மாவட்டத்தில் நேற்று மொத்தம்555 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்தாத குடும்ப உறுப்பினர்களையும் முகாம்களுக்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்துமாறு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x