Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் :

அரியலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்தும் அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் எஸ்.எம்.சந்திரசேகர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.சிவக்குமார் மற்றும் வட்டாரத் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு, அரியலூர்-பெரம்பலூர் சாலை வழியாக திருச்சி சாலையிலுள்ள ஒற்றுமைத் திடல் வரை சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x