Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பாரம்பரிய மைய திறப்பு விழா :

திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த பாரம்பரிய மையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தலைமை வகித்தார். கழகத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட் குத்துவிளக்கேற்றி பாரம்பரிய மையத்தை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், கடந்த காலத்தை பத்திரப்படுத்தி, தற்காலத்துக்கு வரலாறு மற்றும் சார்பு குறித்த அறுபடாத உணர்ச்சியை தரும் அருங்காட்சியகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்கள் போன்று இந்த மையம் திருச்சி என்ஐடியின் 56 ஆண்டுகால வரலாற்றை பறைசாற்றும் என்றார்.

பாரம்பரிய மையத்தின் கட்டிட வடிவமைப்பாளர் ஜோசப் ஆஸ்டின் மையத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினார். விழாவில், தி ரோட் அஹெட் என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. திருச்சி என்ஐடி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x