Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

கரூரில் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் :

கரூர்: சர்வதேச பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து சுவாதி பெண்கள் இயக்க பொருளாளர் ஆர்.மஞ்சுளா தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணைத் தலைவி ஏ.பாக்கியம், கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு கோ.ராஜசேகர், செயலாளர் ஏ.ராதிகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயராமன், சுயஆட்சி இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பெரியசாமி, சாமானிய மக்கள் நலக்கட்சி செயலாளர் என்.சண்முகம், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சக்திவேல், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.சிவா உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x