Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

காரைக்காலில் மரக்கன்றுகள் நடும் பணி :

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நவ.19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தேசிய ஒருமைப்பாட்டு வார விழா நடத்தப்பட்டது.

விழாவின் நிறைவு நாளான நேற்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காரைக்கால் மாவட்டம் போலகம் பகுதியில், பிராவடையான் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியர் அர்ஜூன் சர்மா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் ஜெ.செந்தில்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x